ரெட்டியார்சத்திரம் அருகே பைக் மீது கார் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காரும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காரும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரம் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி குணசேகரன் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை மாங்கரை பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் பலத்தகாயமடைத்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
   இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com