பழனி தைப்பூசத் திருவிழா: பாதுகாப்பு பணிக்குச் செல்லும் தேனி காவலர்கள்

தேனி மாவட்டத்தில் இருந்து பழனி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி மாவட்டத்தில் இருந்து பழனி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில், 387 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பழனிக்குச் சென்றனர்.
பழனியில் நடைபெற்று வரும் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக மாவட்ட காவல் கணிப்பாளர் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 20 காவல் சார்பு ஆய்வாளர்கள், 350 காவலர்கள் கொண்ட குழு தேனியில் இருந்து பழனிக்குச் சென்றுள்ளனர். 
இவர்கள் ஜன.22-ஆம் தேதி வரை பழனியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com