பழனி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன.30) மின்தடை ஏற்படும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன் அறிவித்துள்ளார்.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.