பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை வரதமாநதி அணையை வேடிக்கை பார்க்க சென்றவர் படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
பழனியை அடுத்த வரதமாநதி அணை இந்திரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மோகன்ராஜ் (40). விவசாயியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரதமாநதி அணையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த படிக்கட்டில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மோகன்ராஜ் அங்கு இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.