பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் நிறுத்தம் : பயணிகள் அவதி

பாலக்காடு-திருச்செந்தூர் தினசரி பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலக்காடு-திருச்செந்தூர் தினசரி பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படுவதில்லை. 
மாறாக, வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய 5 நாள்கள் பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல் வரையும், செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பாலக்காட்டில் இருந்து மதுரை வரையும் இயக்கப்படுகிறது. 
 பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பயணிகள் பேருந்துகளில் அதிக கட்டணம் காரணமாக  மதுரை செல்ல, பேருந்துகளை தவிர்த்து இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ரயில்வே துறையினர் இந்த ரயிலை மீண்டும் பாலாக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com