பிளஸ் 2 மாணவிக்கு காதல் கடிதம்: பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த  பள்ளி ஆசிரியர், திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த  பள்ளி ஆசிரியர், திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்துள்ள தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காதல் கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டது. 
 அதில், பழனி பகுதியிலிருந்து தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர் ராஜாஅசோக்குமார், சம்பந்தப்பட்ட மாணவிக்கு காதல் கடிதம் எழுதியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 அதன்பேரில், காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் ராஜா அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com