நத்தம் அருகே பைக்குகள் மோதல்: சிவகங்கை இளைஞர் பலி

நத்தம் அருகே  இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நத்தம் அருகே  இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சிறுகுடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் வீரமுத்து (30). கூலி தொழிலாளியான இவர், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி  வியாழக்கிழமை வந்துள்ளார். அப்போது, எதிரே சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சேகர் (27) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வீரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.       இந்த விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com