திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே செடிகளை எரித்துக் கொண்டிருந்த முதியவர் தீயில் கருகி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சாணார்பட்டி அடுத்துள்ள கவராயபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (80). அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் கருகிய நிலையிலிருந்த செடிகளை தீ வைத்து எரிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீயில் வெள்ளைச்சாமி சிக்கினார். இதில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளைச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.