திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் சனிக்கிழமை காலையிலிருந்து அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் காணப்பட்டது. இந்நிலையில் மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.