வத்தலகுண்டு பகுதியில் பலத்த மழை

திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.


திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் சனிக்கிழமை காலையிலிருந்து அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் காணப்பட்டது. இந்நிலையில் மாலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக  பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com