முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் அருகே பெண் மர்மச்சாவு
By DIN | Published On : 30th July 2019 09:09 AM | Last Updated : 30th July 2019 09:09 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை மலைச் சாலையில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மஞ்சற்பரப்பு கட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஈஸ்வரி (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் காலையில் ஈஸ்வரி மஞ்சற்பரப்பு-வத்தலகுண்டு செல்லும் மலைச் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாண்டிக்குடி
காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இறந்த ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.