காணாமல் போன ஆசிரியர் மர்மச்சாவு

பழனி அருகே 2 நாள்களுக்கு முன் காணாமல் போன  ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தார்.

பழனி அருகே 2 நாள்களுக்கு முன் காணாமல் போன  ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தார்.
    பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் ராமசாமி (75). இவர் ஆயக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த இரு நாள்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
   பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், வியாழக்கிழமை கணக்கன்பட்டி-கோம்பைப்பட்டி சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே உள்ள கரிசல்காட்டில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயக்குடி போலீஸார் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயதான நிலையில் இவர் சம்பந்தமில்லாத இடத்தில் இறந்து கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com