பழனியில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி சத்யா நகரை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் ஜோயல் (12) தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜோயல் படிப்பு தொடர்பாக தந்தையுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோயல், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.