நத்தம் மருத்துவ முடி திருத்துவோர் சங்கத்தின் சார்பில் தியாகி விசுவநாத தாஸின் 133 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நத்தத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைவர் மதுரை வீரன் தலைமை வகித்தார். செயலர் அழகர் பாலன் முன்னிலை வகித்தார். விழாவில் விஸ்வநாத தாஸின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீரை பாதுகாப்போம், மரம் வளர்போம், நெகிழியைப் பயன்படுத்த மாட்டோம் என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.