லாரி மோதி சிறுவன் பலி
By DIN | Published On : 23rd June 2019 12:46 AM | Last Updated : 23rd June 2019 12:46 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை அடுத்துள்ள நல்லகேணி தெருவைச் சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மகன் நிஹாஷ் (16). மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிஹாஷ் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிஹாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு
காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.