கொடைக்கானல் அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் மகளிர் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசியது: பெண்கள் தங்களையும், தங்களது சுற்றுப்புறத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல்நலனை பேணிக் காப்பதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பெண்கள் நல மருத்துவர் சுலோச்சனா, பெண்கள் சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். யோகா, மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி இயக்குநர் ராஜம் வரவேற்றார். போராசிரியை ஜோஷி கவிதா நன்றி கூறினார்.