கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
By DIN | Published On : 06th March 2019 07:36 AM | Last Updated : 06th March 2019 07:36 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்றுகொண்டிருந்த 3 பேரை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், ஒன்றேகால் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விஜி (19), பாலாஜி(21) மற்றும் காமாட்சி (20) எனத் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.