பொள்ளாச்சி சம்பவம்: பழனியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவ,

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கல்லூரி வாயில் முன், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசியல் பாகுபாடின்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com