மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பார்வர்டு பிளாக் கட்சியினர் 80 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனை வலியுறுத்தி திண்டுக்கலில் பார்வார்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் ரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
ரயில் நிலையம் முன்பு, மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.