திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மக்களவைத் தேர்தல் செலவின மேற்பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி லோகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார்.
இதேபோல், கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக வருமான வரித்துறை அலுவலர்கள் அம்பர்கர் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது முன்னிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வேடசந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.