கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட கட்டடங்களை பூட்டி சீல் வைத்தது. இதன் தொடர்ச்சியாக செண்பகனுர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட 10 கட்டடங்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழபூட்டி சீல் வைத்தனர்.