கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை கொடைக்கானல் வட்டாட்சியர் வில்சென்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக கல்லூரி மாணவிகள், சுற்றுலாத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஏரிச்சாலையில் தொடங்கி, நகராட்சி சாலை, கீழ்பூமி வழியாக கலையரங்கத்தை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் உமாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.