திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில், சித்திரை மாத கார்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில், சித்திரை மாத கார்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதனையொட்டி முருகப்பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் செங்குறிச்சி, செந்துறை, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் ரயிலடி கைலாசநாதர் கோயிலிலுள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலுள்ள தண்டபாணி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com