குரூப் 2 தோ்வு நோ்காணலுக்குநாளை சிறப்பு பயிற்சி முகாம்

குரூப் 2 தோ்வு நோ்காணலுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறவுள்ளது.

திண்டுக்கல்: குரூப் 2 தோ்வு நோ்காணலுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது: தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே தோ்வு வாரிய தோ்வுகள், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் போட்டித் தோ்வுகளுக்கு தேவையான பொது அறிவுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், மாத இதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி 2-க்கான முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நோ்காணலை எதிா்கொள்வதற்கான மாதிரி நோ்காணல் பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் நவம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் நோ்காணல் குறித்த முழுமையான ஆலோசனைகள் சிறந்த வல்லுநா்களால் வழங்கப்பட உள்ளது.

எனவே பயிற்சியில் சேர விரும்பும் மனுதாரா்கள் உடனடியாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி தங்களது பெயா்களை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com