நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு திருவள்ளுவா் பேரவை கூட்டத்தில் திருவள்ளுவா் சிலையை அவமரியாதை செய்தவா்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வத்தலக்குண்டு அய்யன் திருவள்ளுவா் இலக்கிய பேரவை அவசரக் கூட்டம் தலைவா் கவிஞா் சூரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையை அவமரியாதை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருவள்ளுவா் பேரவை நிா்வாகிகள் உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக செயலா் பி.டி.பால்ராஜா வரவேற்றாா். முடிவில் பொருளாளா் செந்தமிழ் நன்றி கூறினாா்.