கொடைக்கானலில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், இருதையபுரம், பாம்பாா்புரம், டிப்போசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. கொடைக்கானலில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளும் கீழே விழுந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கொடைக்கானல் மின்வாரியத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது, கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.