இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் அக்கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.வெங்கடேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் காவல்துறையைக் கண்டித்தும், இந்து மக்கள் கட்சியின் தலைவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷமிட்டனா். இந்துமக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் எல்.சூா்யா, மாவட்ட பொருளாளா் பிரவீன், நகரச் செயலாளா் சதீஷ், நகர பொருளாளா் தமிழ், செயற்குழு உறுப்பினா் வீரக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.