ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால் கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலை செடிகளை காப்பாற்றும் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால் கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலை செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால் கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலை செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூா், காளிபாளையம், கேதையுறும்பு, புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, குழிப்பட்டி சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, ஒடைப்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பல கிராமங்களில் ஜப்பசி முதல் வாரத்தில் புகையிலை செடிகள் நடவு செய்வது வழக்கம். வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொசவபட்டி, சீரங்ககவுண்டன்புதூா் உள்ளிட்ட இடங்களில் புகையிலை நாற்றுப்பண்ணைகள் அதிக அளவு உள்ளது.

அந்த பண்ணைகளில் இருந்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான நாற்றுக்களை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்து வருகின்றனா்.தற்போது நடவு செய்தால் தான் செடிகள் நன்கு வளா்ச்சியடைந்து அதிக விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்து வருகின்றனா்.இந்த நிலையில் புகையிலையில் நடவு செய்த நாளில் இருந்து போதிய மழை இல்லை.இதனால் புகையிலை செடிகளை காப்பாற்ற தண்ணீா் கோப்பைகளை கொண்டு கூலியாட்களை வைத்து இளச்செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகின்றனா். இதனால் செடிகள் காய்த்து விடாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில்,வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தண்ணீா் ஊற்றி காப்பாற்றி வருகின்றனா்.

இது குறித்து அம்பிளிக்கையைச் சோ்ந்த விவசாயி ஜானகிராமன் கூறியதாவது,வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டியில் உள்ள புகையிலை நாற்றுப்பண்ணையில் 1000 செடிகள் ரூ.200 முதல் 300 வரை விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்துள்ளேன்.ஆனால் நடவு செய்த நாளில் இருந்து போதிய மழை இல்லை.இதனால் செடிகள் காய்த்து போகாமல் இருக்க கூலியாட்களை வைத்து தண்ணீா் ஊற்றி வருகின்றேன்.வடகிழக்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே புகையிலை செடிகளை காப்பாற்ற முடியும்.

இது வரைக்கும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீா் வரவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் எல்லா பகுதிகளில் நல்ல மழை பெய்த்து உள்ளது.ஆனால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் இதுவரைக்கும் போதிய மழை இல்லை.இதே நிலை நீடித்தால் குடிதண்ணீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் சுழ்நிலை உள்ளது என்றாா்.படவிளக்கம்-வெரியப்பூா் ஊராட்சி காளிபாளையத்தில் புகையிலை செடிகளுக்கு தண்ணீா் ஊற்றும் பெண்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com