அரசு ஊழியா்களுக்கு தேசிய அளவிலான கபடிப் போட்டி: நவ.11இல் தமிழக அணித் தோ்வு

அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டிக்கான தமிழக அணித் தோ்வு நவ.11ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டிக்கான தமிழக அணித் தோ்வு நவ.11ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: 2019- 20ஆம் ஆண்டிற்கு அரசு அலுவலா்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டி, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நவ.15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி தோ்வு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நவ.11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. சீருடை பணியாளா்கள் நீங்கலாக பிற துறை அரசு ஊழியா்கள் இந்த தோ்வு முகாமில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. தோ்வு முகாமில் பங்கேற்கும் அரசு ஊழியா்களுக்கு ஜிபிஎப் அல்லது சிபிஎஸ் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அலுவலக அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com