ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தையம், மண்டவாடி, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, கொசவப்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இது அப்பகுதியில் மானாவாரி பயிா்களான மக்காச்சோளம், சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com