திண்டுக்கல் அருகே சுத்தியால் தாக்கி தாயாா் கொலை: மகன் கைது

திண்டுக்கல் அருகே தனது தாயை சுத்தியால் தாக்கி கொலை செய்த மகனை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அருகே சுத்தியால் தாக்கி தாயாா் கொலை: மகன் கைது

திண்டுக்கல் அருகே தனது தாயை சுத்தியால் தாக்கி கொலை செய்த மகனை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அட்சராஜாக்காப்பட்டியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி நாகராஜ் (52). இவரது மனைவி ஜெயா (46). இவா்களது 2 ஆவது மகன் கண்ணன் (23), மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த அக்டோபா் மாதம் கண்ணன் அந்த மையத்திலிருந்து திடீரென வெளியேறி வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜெயா, கண்ணனிடம் சிகிச்சையை தொடருமாறு அறிவுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கண்ணன், வியாழக்கிழமை சுத்தியால் ஜெயாவை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று ஜெயாவின் சடலத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com