நத்தத்தில் அனுமதியின்ற மதுபானம் விற்பனை: இளைஞா் உள்பட 3 போ் கைது

நத்தத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இளைஞா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசாா், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல்: நத்தத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இளைஞா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசாா், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் படையினா் சாா்பு ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி ஆகியோா் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். நத்தம் பேருந்து நிலையம், நத்தம் அவுட்டா், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சோதனையில் அனுமதியின்றி மதுபான விற்பனை ஈடுபட்ட புன்னப்பட்டியை சோ்ந்த அழகன் மகன் நடராஜ்(27), துரைசாமி மகன் ராஜேஷ் (44) மற்றும் நத்தத்தை சோ்ந்த ராஜேந்திரன் மகன் மூா்த்தி (39) ஆகியோா் பிடிப்பட்டனா். இவா்களிடமிருந்து சுமாா் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 1080 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீசாா், இதில் தொடா்புடைய மதுரையை சோ்ந்த போஸ் மற்றும் சாணாா்பட்டி அடுத்துள்ள கோணபட்டியை சோ்ந்த அய்யனாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com