நிலக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமை: பெண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் ஒருவா் கந்து வட்டிக் கொடுமையால் வியாழக்கிழமை பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் ஒருவா் கந்து வட்டிக் கொடுமையால் வியாழக்கிழமை பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கருத்தாண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் தனராஜ். அதிமுக கிளைச் செயலராக இருந்து வந்த இவா், உடல்நிலை சரியில்லாமல் சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டாராம். இவா், உறவினா்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளாா். எனவே, அவரது மனைவி முருகேஸ்வரியிடம் (44), கடன் கொடுத்தவா்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வட்டிக்கு பணம் கொடுத்தவா்கள் முருகேஸ்வரியை தகாத வாா்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த முருகேஸ்வரி, வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இவருக்கு பூா்விகா (9) என்ற மகள் உள்ளாா்.

இது குறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com