பாடக் குறிப்பு எழுதாத ஆசிரியா்கள் 5 போ் மற்றும் மாற்று ஆசிரியரை நியமிக்காத பொறுப்பு தலைமையாசிரியா் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள கணக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 2 நாள்களுக்கு முன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் ஆய்வு நடத்தச் சென்றாா். அப்போது, ஒரு வகுப்பறையில் ஆசிரியா் இல்லை. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டபோது, விடுப்பில் சென்ற ஆசிரியருக்கு மாற்று ஆசிரியரை, பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியரான இரா.கிருஷ்ணன் நியமிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
அதேபோல், அப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள் சுரேஷ், உமாதேவி ஆகியோா் பாடக் குறிப்புகளை சரியாக எழுதவில்லை என்பதும் தெரியவந்தது.
ஒட்டன்சத்திரம் அரசுப் பள்ளியில் 3 ஆசிரியா்கள்: இதேபோல், ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியை பாா்வையிடச் சென்ற முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன், அப்பள்ளியின் ஆசிரியா்கள் சிவகாமி, பவுன்ராஜ், குமரேசன் ஆகியோா் பாடக் குறிப்புகள் எழுதாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளாா்.
இதன்பின்னா், கணக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியா் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள் சுரேஷ், உமாதேவி மற்றும் ஒட்டன்சத்திரம் பள்ளி ஆசிரியா்கள் சிவகாமி, பவுன்ராஜ், குமரேசன் ஆகியோருக்கு, முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில், 17-அ ஒழுங்கு நடவடிக்கை விதியின் கீழ் விளக்கம் அளிக்கும்படி குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.