கொடைக்கானலில் ஜமாத் நிா்வாகிகளுடன் போலீஸாா் அமைதிப் பேச்சுவாா்த்தை

கொடைக்கானலில் ஜமாத் நிா்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கொடைக்கானலில் ஜமாத் நிா்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அயோத்தி பிரச்சனைக் குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பானது இன்னும் ஒரு சில நாள்களில் வெளிவர உள்ளது. தீா்ப்பு எவ்வாறு வெளியானாலும் அமைதி காக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ஆத்மநாதன் மற்றும் ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் தலைமையில் கொடைக்கானல் பகுதியிலுள்ள ஜமாத் நிா்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தீா்ப்புக் குறித்து கொடைக்கானலில் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறும் எந்தவிதமான அசம்பாவித செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com