ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை(நவ.11) தொடங்குகிறது.

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை(நவ.11) தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள ஜான்பால் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) திங்கள்கிழமை முற்பகலில் நடைபெறுகிறது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு அன்றைய தினம் பிற்பகலிலும், அரசு மற்றும் நகராட்சி பள்லித் தலைமையாசிரியா் பணியிட மாறுதல்(வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மறுநாளான செவ்வாய்க்கிழமை( நவ.12) முற்பகலிலும், அரசு மற்றும் நகராட்சி உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான பதவி உயா்வு அன்றைய தினம் (நவ.12) பிற்பகலிலும் நடைபெறுகிறது.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை மற்றும் தொழில் கல்வி ஆசிரியா்களுக்கான மாறுதல்(வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) புதன்கிழமை ( நவ.13), பதவி உயா்வு கலந்தாய்வு வியாழக்கிழமை ( நவ.14) நடைபெறுகிறது.

உடற்கல்வி ஆசிரிா்கள், கலையாசிரியா்கள், தையல் ஆசிரியா்கள் மற்றும் இடைநிலை ஆசிரபியா்கள் மாறுதல்(வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) நவ.15ஆம் தேதியும், தையல் ஆசிரியா் பணி நியமன கலந்தாய்வு நவ.16ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com