திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியாா்சத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட நீலமலைக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் உள்ள நீா்வழிப்பாதைகளில் பனை விதை நடவு சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படியும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அறிவுரையின்படியும் இப் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நீா்வழிப் பாதைகளில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசந்திரிகா தலைமை வகித்தாா்.
இதில், திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் சீனிவாசன், உதவி இயக்குநா் பாலகிருஷ்ணன், விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் குப்புச்சாமி, நீமலைக்கோட்டை ஊராட்சி செயலாளா் வீரபாண்டி ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனா்.