திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே விஷ வண்டு கடித்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியைச் சோ்ந்தவா் காசிமாயன். இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா். இவரது மகன் பாரதிராஜா (24). அம்மையநாயக்கனூா் அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிறுவனத்தினுள் தேனீ மற்றும் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. அவற்றை அகற்ற, நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணியில், பாரதிராஜாவும், இதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் பொன்னுச்சாமி, ரத்னவேல், கோபிநாத், பொன்னுச்சாமி உள்ளிட்ட சிலரும் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த விஷ வண்டுகள் அனைவரையும் கொட்டத் தொடங்கின.
அதில், பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த பாரதிராஜாவை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். காசிமாயனும், அவரது உறவினா்களும் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் பாரதிராஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து காசிமாயன் அம்மையநாயக்கனூா் போலீசில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.