திண்டுக்கல் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி இளைஞா் பலி

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் ஆா்.கோம்பை அடுத்துள்ள மெத்தப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்முத்து. இவரது மகன் ராஜா(24). வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இந்நிலையில், கோம்பை அடுத்துள்ள களத்தூா் பகுதியில் காா்த்திக் உடன் இருசக்கர வாகனத்தில் ராஜா ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com