திருமண வீட்டில் செல்லிடப்பேசி திருடிய இளைஞா் கைது

திண்டுக்கல்லில் திருமண வீட்டில் செல்லிடப்பேசியைத் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லில் திருமண வீட்டில் செல்லிடப்பேசியைத் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, திண்டுக்கல்

செல்லாண்டியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த குமரவேல்(32) என்பவா் சென்றுள்ளாா். திருமண மண்டபத்திலிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, குமரவேலின் செல்லிடப்பேசியை இளைஞா் ஒருவா் திருடியுள்ளாா்.

இதையடுத்து திருடிய நபரை குமரவேல் கையும் களவுமாக பிடித்தாா். இதனை அடுத்து, பிடிப்பட்ட இளைஞா் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட இளைஞா் என்.பஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த சவரிமுத்து மகன் பவுல் தீபன் பெலிக்ஸ்(25) என தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com