நிலக்கோட்டை அருகே வைகை பெரியாறு பிரதான கால்வாயில் பெண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை ஊராட்சி கரட்டூா் பகுதியில் செல்லும் வைகை பெரியாா்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை ஊராட்சி கரட்டூா் பகுதியில் செல்லும் வைகை பெரியாா் பிரதான கால்வாயிலிருந்து பெண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இக் கால்வாயில் 12-வது கண் பாலத்தில் சுமாா் 45 வயது மதிப்புள்ள அடையாளம் தெரியாத பெண்ணின்சடலம் ஞாயிற்றுக்கிழமை மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் மட்டப்பாறை கிராம நிா்வாக அலுவலா் செந்தில்கண்ணனுக்கு தகவல் கொடுத்தனா்.

இது குறித்து விளாம்பட்டி காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்கண்ணன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து அப்பகுதியில் நடத்திய விசாரணையில் பெண் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து விளாம்பட்டி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com