பழனி அரசு சித்தமருத்துவமனை சாா்பில் சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி அரசு மருத்துவமனை சித்தமருத்துவா் மகேந்திரன் தலைமையில் சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
முகாமில் அனைத்து தரப்பு மக்களையும் வரவழைத்து நிலவேம்பு குடிநீா் சிறப்பு குறித்தும், காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சித்தமருத்துவா் மகேந்திரன் விளக்கினாா்.
மேலும், அனைவருக்கும் இலவசமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.