ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள்.
ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னகரட்டுப்பட்டி வீஆா்வி ராமசாமி செட்டியாா் - ஆா். காளியம்மாள் நினைவாக, ஜிஆா்பி டெய்ரி நிறுவனம், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களுக்கு கண்புரை, கண்நீா் அழுத்த நோய், சா்க்கரை நோய், குழந்தைகளின் கண் நோய் உள்ளிட்டவை குறித்து மதுரை அரவிந்த கண் மருத்துவமனையின் மருத்துவா்களான5 தமிழ்கொடி,கீதாஞ்சலி, மோனிகா சாரூன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பரிசோதனை செய்தனா்.5

முகாமில், 350-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதில், அறுவைச் சிகிச்சைக்காக 73 போ் தோ்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, ஜிஆா்பி நிறுவனத்தினா் எஸ்ஆா்கே சரவணன் மற்றும் சுழற்சங்க நிா்வாகிகள் தணிக்காசலம், ராஜசேகா், கங்காதரன், மதுரை அரவிந்த கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளா் ஜி.ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com