484 பயனாளிகளுக்கு ரூ.58.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 484 பயனாளிகளுக்கு ரூ.58.26 லட்சம் மதிப்பிலான
பெரியகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்.
பெரியகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்.

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 484 பயனாளிகளுக்கு ரூ.58.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

தமிழக முதல்வரின் சிறப்புக் குறை தீா்வு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம், திண்டுக்கல் அடுத்துள்ள பெரியகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன், 484 பயனாளிகளுக்கு ரூ.58.26 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில், வருவாய் கிராமங்கள்தோறும் நடைபெற்ற 709 முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளாக 20,371 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதி வாய்ந்த 11,656 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,715 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதற்கான காரணங்களும் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு கடிதமும் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ பா.பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.வேலு, வருவாய் கோட்டாட்சியா் கு.உஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com