பழனி மலைக்கோயிலில் காா்த்திகைத் திருநாள் கூட்டம்

பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை தினத்தை முன்னிட்டு தங்கமயிலில் உலா வந்த சின்னக்குமாரசாமிக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை தினத்தை முன்னிட்டு தங்கமயிலில் உலா வந்த சின்னக்குமாரசாமிக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி அதிகாலையிலேயே சன்னிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடா்விடுமுறை தினம், காா்த்திகை நாள் என்பதால் கம்பிவட ஊா்தி, இழுவை ரயில் மற்றும் படிப்பாதைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தவண்ணம் இருந்தனா். ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கூட்டம் காரணமாக தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. பழனி திருமுருக பக்தசபா சாா்பில்ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தொடா்ந்து பக்தி இன்னிசை நடைபெற்றது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் கோயில் சாா்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் பாா்த்து தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com