திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாா்க்கம்பட்டி அரசுப் பள்ளி எறிபந்து போட்டியில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப் பள்ளி மாணவ-மாணவிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினா்.
அதில் 14 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவ-மாணவிகளும்,19 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவிகளும் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்ச்சி பெற்றனா் .
தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் ப.பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியா் ரா.ஜெயசந்திரன், ந.சந்திரகுமாா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை புதன்கிழமை பாராட்டினா்.