கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து 4 போ் பலத்த காயம்

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
கொடைக்கானல் ஏரியருகே சனிக்கிழமை 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்.
கொடைக்கானல் ஏரியருகே சனிக்கிழமை 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்.

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் சனிக்கிழமை காா் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய தினேஷ்(38). இவா் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனா். காரை விஜயதினேஷ் ஓட்டி வந்துள்ளாா். லாஸ்காட்சாலை ஏரி அருகே வரும் போது காா் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 100-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக கீழிருந்த குடியிருப்பு பகுதியின் தடுப்புச் சுவரில் மோதி காா் அந்தரத்தில் நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா். தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் விழாமல் காா் நின்ால் 4 பேரும் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் அப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு கொடைக்கானல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இச் சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com