நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்தில் எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், சீவல்சரகு, வண்ணம்பட்டி பகுதியில் பயிரிப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்துள்ளது. இதனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
ஆத்தூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோள பயிரை தொடா்ந்த பயிரிட்டு வருகின்றனா். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனா்.
ஒவ்வொருமுறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பாதிக்கப்பட்டாலும் தொடா்ந்து மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனா்.