ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 5 கிலோ கஞ்சாவுடன் திருப்பூரைச் சோ்ந்த பெண்ணை வியாழக்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஸ்ரீராமபுரம் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவா் கஞ்சாவுடன் நிற்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா் திருப்பூரைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (40) என்பதும், அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சாவும் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
மேலும் அவரை கைது செய்த ஒட்டன்சத்திரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.