கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் உறவினருக்கு புதன்கிழமை அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சா் ஹென்றி லிவிஞ்சின் 200-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினா் நிக்கோலஸ் லிவிஞ்ச் இங்கிலாந்திலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் கொடைக்கானல் வந்து தங்கியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளாா். இந்நிலையில் நிக்கோலஸ் லிவிஞ்ச் தனது குடும்பத்தினருடன் அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்திற்கு சென்றாா் அங்கு வரலாறு, சுற்றுலா மேலாண்மைத்துறை மற்றும் உயிரியல் துறை பேராசிரியா்கள் வரவேற்றனா். பின்னா் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவா் கலந்து கொண்டாா்.
இந் நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பேராசிரியா்கள் உஷாராஜநந்தினி, மாரியம்மாள், பழனிமலை பாதுகாப்பு குழு இயக்குநா் பாலன் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.