ரெட்டியாா்சத்திரம் அருகே தாய் அடித்துக் கொலை: மகன் கைது

ரெட்டியாா்சத்திரம் அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரெட்டியாா்சத்திரம் அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த மதனகோபால் என்பவரின் மனைவி எல்லம்மாள் (75). இவருக்கு ராஜேந்திரன், மணிவேல் என இரண்டு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் எல்லம்மாள், இளைமகன் மணிவேல் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். இதனால் தாய் எல்லம்மாளுக்கும், மகன் ராஜேந்திரனுக்கும் இடையே நீண்ட நாள்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை, தாய் எல்லம்மாளுக்கும், மகன் ராஜேந்திரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாய் எல்லம்மாளை, மகன் ராஜேந்திரன் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளாா். அதில் எல்லம்மாள் நிலைதடுமாறிஅருகில் இருந்த சுவற்றில் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com